1) “ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை” – என்ற பாடலைப் பாடியவர்
a) கண்ணதாசன்
b) உடுமலை நாராயண கவி
c) மருதகாசி
d) பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
2) சித்துகளின் எண்ணிக்கை
a) பன்னிரண்டு
b) பதினெட்டு
c) பத்து
d) எட்டு
3) சரசுவதி என்று சித்தர்கள் எதனைக் குறிப்பிடுகின்றனர்?
a) காசினிக் கீரை
b) வல்லாரைக் கீரை
c) பசலைக் கீரை
d) அகத்திக் கீரை
4) குறுமுனி என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்
a) திருமூலர்
b) அகத்தியர்
c) வள்ளுவர்
d) புத்தர்
5) சித்தர் பாடலில் ‘கடம்’ என்பதன் பொருள் யாது?
a) பாம்பு
b) இறுமாப்பு
c) உடம்பு
d) வேம்பு
6) உருவ வழிபாடு செய்யாமல் வெட்ட வெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர் யார்?
a) பாம்பாட்டிச் சித்தர்
b) கடுவெளிச்சித்தர்
c) குதம்பைச் சித்தர்
d) அழுகுணிச்சித்தர்
7) உடற்பிணியைப் போக்கும் மருத்துவ நூல்கள் இயற்றிய சித்தர்கள்
1) அகத்தியர்
2) தேரையர்
3) போகர்
4) புலிப்பாணி
a) 1, 4 – சரி
b) 1, 3, 4 – சரி
c) 2, 4 – சரி
d) 1, 2, 3, 4 – சரி
8) ‘திரைக்கவித் திலகம்’ எனச் சிறப்புப் பெயர் பெற்றவர்
a) கண்ணதாசன்
b) வாலி
c) வைரமுத்து
d) மருதகாசி
9) பொருந்தாததைத் தேர்நதெடுத்து எழுதுக.
கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
a) பெண்களைப் பழித்துப் பேசாதே!
b) பாம்போடு விளையாடாதே!
c) போலி வேடங்களைப் போடாதே!
d) தீயொழுக்கம் செய்யாதே!
10) பாம்பினைப் பற்றி ஆட்டாதே – உன்றன் பத்தினிமார்களைப் பழித்துக் காட்டாதே எனப் பாடிய சித்தர்
a) தேரையர்
b) பாம்பாட்டிச்சித்தர்
c) போகர்
d) கடுவெளிச்சித்தர்