1) திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தவர் யார்
a) மு. சண்முகனார்
b) வீரமாமுனிவர்
c) ஜி.யு.போப்
d) குணங்குடி மஸ்தான்
2) கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கள் வென்ற சீர்முகத் திளவல் பின்னர்த் திறத்ததன் னாம வேலாற் என்ற வரிகளை எழுதியவர் யார்
a) ஒட்டக்கூத்தர்
b) பாரதிதாசன்
c) பாரதியார்
d) வீரமாமுனிவர்
3) இங்கிலாந்து தேச சரித்திரம் எனும் சிறந்த உரைநடை நூலை எழுதியவர் யார்?
a) மு. சண்முகனார்
b) வீரமாமுனிவர்
c) ஜி.யு.போப்
d) குணங்குடி மஸ்தான்
4) திருக்குறளின் அறத்துப் பால், பொருட் பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
a) மு.சண்முகனார்
b) வீரமாமுனிவர்
c) குணங்குடி மஸ்தான்
d) ஜி.யு. போப்
5) கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
a) வீரமாமுனிவர்
b) மாக்சுமுல்லர்
c) ஜி.யூ. போப்
d) அறிஞர் கால்டுவெல்
6) வேத சாஸ்திரி என்றழைக்கப்படும் சான்றோர் யார்?
a) ஜி.யு.போப்
b) வீரமாமுனிவர்
c) பாரதியார்
d) குணங்குடி மஸ்தான்
7) வைத்திய சிந்தாமணி, சுரமஞ்சரி என்ற மருத்துவ நூலை இயற்றியவர் யார்?
a) மு. சண்முகனார்
b) வீரமாமுனிவர்
c) குணங்குடி மஸ்தான்
d) ஜி.யு.போப்
8) தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என்ற நூலைத் தொகுத்தவர் யார்?
a) ஜி.யூ. போப்
b) வீரமாமுனிவர்
c) கால்டுவெல்
d) எமினோ
9) தேம்பாவணி என்பது
a) சைவக் காப்பியம்
b) கிறித்துவக் காப்பியம்
c) இசுலாமியக் காப்பியம்
d) வைணக் காப்பியம்
10) தமிழ் பாட நூலின் முன்னோடி என்று போற்றப்படுபவர் யார்?
a) கால்டுவெல்
b) மாக்சுமுல்லர்
c) ஜி.யூ. போப்
d) அறிஞர் கால்டுவெல்