விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் (PQ)

1) ஒளவையார் ஆத்திசூடி பாடினார்

a) ஒளவையார் ஆத்திச்சூடியைப் பாடினாரா?
b) ஔவையார் எதனை பாடினார்?
c) ஆத்திச்சூடியைப் பாடியவர் யார்?
d) ஒளவையார் பாடிய நூல்கள் யாவை?

2) இயற்கையைச் சார்ந்தே மனம் இயங்குகிறது

a) மனம் இயங்குகிறது என்றால் என்ன?
b) மனம் இயங்குகிறதா?
c) இயற்கையாக மனம் இயங்குகிறதா?
d) மனம் எதைச்சார்ந்து இயங்குகிறது?

3) உழைத்தவர் உண்ண முடியும்

a) உண்ண உழைக்க வேண்டுமா?
b) எதைச் செய்ய வேண்டும்?
c) யார் உண்ண முடியும்?
d) உழைத்தவர் உண்ண முடியுமா?

4) ஊரோடு ஒத்து வாழ வேண்டும்

a) யாரோடு ஒத்து வாழ வேண்டும்?
b) ஊரோடு ஒத்து வாழ வேண்டுமா?
c) எவ்வாறு வாழ வேண்டும்?
d) எதனோடு ஒத்து வாழ வேண்டும்?

5) ஆம், இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டது

a) இரயில் சரியான நேரத்தில் புறப்பட்டதா?
b) இரயில் எப்படிப் புறப்பட்டது?
c) எப்படி இரயில் புறப்பட்டது?
d) இரயில் எப்பொழுது புறப்பட்டது?

6) தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை

a) தமிழ்நாட்டின் தலைநகரம் எங்கு உள்ளது?
b) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
c) சென்னை எதற்குத் தலைநகரம்?
d) தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னைதானா?

7) மூன்று மாணவர்கள் முதலிடம்

a) முதலிடம் பெற்றவர்கள் மூன்று பேரா?
b) எவ்வளவு பேர் முதலிடம் பெற்றனர்?
c) முதலிடம் பெற்றவர் யார்?
d) எத்தனை மாணவர்கள் முதலிடம் பெற்றனர்?

8) பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார்

a) எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?
b) எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.
c) பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?
d) பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?

9) திருக்குறளில் மூன்று பாடல்கள் உள்ளன

a) திருக்குறளில் உள்ள பால்கள் எவையெவை?
b) திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?
c) திருக்குறளில் உள்ள மூன்று பால்கள் எவ்வளவு?
d) திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளனவா?

10) சிலப்பதிகாரம் மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும்.

a) இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?
b) இரட்டைக் காப்பியங்கள் யாவை?
c) இரட்டைக் காப்பியத்தை விளக்குக.
d) இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.